Wednesday, July 15, 2015

தேங்காய் பால் பன்னீர்



தேவையான பொருட்கள்:
பன்னீர்  - 1 கப்
பெரிய வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
பட்டை  - 1 இஞ்ச்
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
காய்ந்த மேத்தி - சிறிதளவு
முட்டை  மசாலா  - 1 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய்  - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:
* வாணலியில் எண்ணெய் காயவைத்து, பட்டை,கிராம்பு,ஏலக்காய் மற்றும் பிரியாணி இலை தாளிக்கவும்.
* இத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கிய பின் முட்டை மசாலா சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, மூடி வைத்து சிறு தீயில் வேக விடவும்.
* தக்காளி வெந்து மசிந்ததும், சின்னதாக நறுக்கிய பன்னீர் இத்துடன் சேர்த்து மெதுவாகக் கிளறி 5 நிமிடங்கள் வேக விடவும்.
* இப்பொழுது தேங்காய் பால் சேர்த்து 3 நிமிடங்கள் சிறு தீயில் வேகவிட்டு, காய்ந்த மேத்தி தூவி இறக்கவும்.

 மிகவும் அருமை ருசி.

குறிப்பு: செல்வன் ஜி குறிப்பிட்டது போல் தேங்காய்பால் எப்பவாவுது ஒருமுறை பேலியோ உணவாக எடுத்துக்கொள்ளலாம். நன்றி.

செய்முறை: Mythili Thiyagu





No comments:

Post a Comment