Wednesday, July 8, 2015

கற்றாழை சூப்





தேவையான பொருட்கள்:
எருமைக்கறிதுண்டுகள்: 600 கிராம்
கற்றாழை இலைகள்; 2 (முள்ளை நன்றாக செதுக்கி எடுக்கவேண்டும்)
தக்காளி: 1
நறுக்கிய பெரிய வெங்காயம்: 1/2
பூண்டு: 2
வெஜிட்டபிள் ப்ராத்
மசாலாபொடிகள்:
தாய் ரெட் கர்ரி பேஸ்ட்- 5 ஸ்பூன்
உப்பு- 2 ஸ்பூன்

செய்முறை:
* இறைச்சியை ஸ்லோகுக்கரில் நறுக்கி போடவேண்டும்.இறைச்சி மேலே தாய் ரெட் கர்ரி போடவேண்டும்.இறைச்சி மூழ்கும் அளவு வெஜிட்டபிள் ப்ராத் ஊற்றவேண்டும்.நறுக்கிய கற்றாழை இலையை மேலே போடவேண்டும்.தக்காளி வெங்காயம் போட்டு, உப்பை போட்டு மூடி ஐந்து மணிநேரம் லோ செட்டிங்க்ஸில் வேகவிடவேண்டும்
சுவை:
கற்றாழை வெண்டைக்காய் பாணியில் வழு, வழு என இருக்கிறது. ஆனால் இதில் சுவை என்பதேதுமில்லை. பிளான்ட் ஆக இருக்கிறது

தக்காளி ஜூஸ் ஆகி, கற்ராழை, தாய் கர்ரி எல்லாம் தாண்டி இரைச்சியில் இறங்கும் பாருங்கள்அதான் தெய்வீகம்ஐந்து மணிநேரம் தக்காளி ஜூஸிலும், ரெட் கர்ரியிலும் வெந்த எருமைஇறைச்சியை உண்பது பரமானந்தம்.

இந்த சுவையான,புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment