Sunday, April 19, 2015

பொல்டே சய்னோ - (முன்னோர் மட்டன்)


தேவையான பொருட்கள்:
சாம்பார் வெங்காயம்(சின்ன வெங்காயம்) - 20
மட்டன் - 500 கிராம்
சிவப்பு மிளகாய் - 4
உப்பு
தேங்காய் `

செய்முறை:
* சாம்பார் வெங்காயம்(சின்ன வெங்காயம்) சிறிதாக வெட்டிக்கொள்ளவும்.
* குக்கரில் 4-5 டம்ளர் நீர் விட்டு மட்டன், வெட்டிய சாம்பார் வெங்காயம் மற்றும் நான்கு காய்ந்த சிவப்பு மிளகாய் போட்டு 4-5 விசில் வரும் வரை வேக விடவும்.
* நன்றாக வெந்த பிறகு, குக்கர் முடியை திறந்து உப்பு போட்டு சிறிது நேரம் நீர் வற்றும் வரை வேக விடவும். 
* இத்தோடு தேங்காயை சிறு துண்டுகளாக வெட்டி கடைசியாக நீர் வற்றுவத்ற்க்கு சற்று முன்னதாக போட்டால் அந்த தேங்காயில் மட்டன் சுவை இரங்கி அது ஒரு தனி டேஸ்டாக இருக்கும். 

குறிப்பு: மட்டனை குழம்பாகவும், மசாலா போட்டு க்ரேவியாகவும் தான் வழக்கமாக உண்பதால் மசாலவின் சுவை சற்று தூக்கலாக இருக்கும். முன்னோர் உணவை உண்பதாக சொல்லிவிட்டு அவர்களைப்போல் சாப்பிடாமல் இருந்தால் எப்படி? ஆட்டு கறியின் உண்மையான சுவைய உணர வேண்டுமா? இதை உண்டு மகிழவும் :).


இந்த சுவையான சமையல் குறிப்பினை வழங்கிய "Vasan Bangalore" அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment