Monday, April 13, 2015

முட்டைகோஸ் பிரியாணி

தேவையான பொருட்கள் :
 பெரிய வெங்காயம் -1
 தக்காளி  - 1
இஞ்சிபூண்டு விழுது - சிறிது
காய்கறிகள் - (தேவையானவை)
( நான் காரட்.புடலை,சவ்சவ்.நூக்கல்,புதினா போட்டேன்.)  100 கிராம் போதும்.
          முட்டைகோஸ்=100 கிராம்(காரட் சீவும் சீவீயில் துருவிக் கொள்ள வேண்டும்)

செய்முறை:
குக்கரில் சிறிது நெய் விட்டு பட்டை.கிராம்பு,சோம்பு போடவும்.
பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
பின் நறுக்கிய தக்காளி  போட்டு வதக்கவும்.
பின் இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கவும்..
பின் அந்த நெய்யில்பிரியாணி மசாலா” 2 ஸ்பூன் போடவும். பின் வதக்கவும்.உப்பு போடவும்.
* பின் காய்கறிகள் போட்டு வதக்கவும்
பின் முட்டைகோஸ் போட்டு வதக்கவும்.
நன்றாக அனைத்தும் ஒன்று சேரும் வரை வதக்கவும்.
பின் குக்கரை மூடி விடவும்.
நீர் ஊற்ற வேண்டாம்
* அடுப்பை சிம்மில் போடவும்.
* 2 விசில் வரும் வரை விடவும்.(அடி பிடிக்காது.)
காய்கறிகளில் உள்ள நீரே போதும்.
* தம் அடங்கிய பின்.குக்கரை திறந்து 1/2 எலுமிச்சை விடவும்.
தேவை எனில் மல்லித்தழை தூவவும்.

குறிப்புகள்: 
* தொட்டுக் கொள்ள தயிர் பச்சடி நன்றாக இருக்கும்.சூடாக சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
* ஆறிய பின், முட்டையை வதக்கி, அதனுடன் இந்த முட்டைகோஸ் பிரியாணியைப் போட்டு வதக்கவும்.
சாப்பிட அதுவும் நன்றாக இருக்கும்


இந்த புதுமையான,சுவைமிகுந்த சமையல் குறிப்பினை வழங்கிய "SubbuLakshmi" அவர்களுக்கு நன்றி. :)





No comments:

Post a Comment