Wednesday, May 20, 2015

ஆட்டுக்கால்சூப்





மாலைநேரத்தில் ஆட்டுக்கால்சூப் எடுக்கும்போது உற்சாகமாக உணரமுடிகிறது.! 
இந்தசூப் செய்வது எப்படி??
எளிமையான முறையில் செய்யலாம் 
விறகு அடுப்பாஇருந்தா சுவைஅதிகமாகும்.
முடிநீக்கிய ஆட்டுக்காலை சின்னதாவெட்டிய பின்பு நீரில் கல்உப்பு கைப்பிடிஅளவு போட்டு காலைகழுவ வேண்டும் காலைதனியா எடுத்துட்டு சமையலுக்கு தயாராகலாம் 3கரணடிமிளகு,
2கரண்டிசீரகம்,
2கரண்டிமல்லி,
10சின்னவெங்காயம்,
5பூண்டு,
இதெல்லாம் அம்மில அரைச்சு ஒரளவுக்குதான் அரைக்கனும் பின்பு
வாணலியில் நல்லெண்ணய் காய்ந்தவுடன் கருவேப்பிலை 1பச்சமிளகாய், 2தக்காளி தாளிச்சபின் அம்மிலஅரச்சமசாலா கால்துண்டுகள் போட்டு கிளறியபின் லேசா மஞ்சள்தூள் 3லிட்டர் தண்ணிஊத்தி தேவையானஉப்பு சேர்த்து நல்லாகொதிக்கவிட்டபின் 6,7மணிநேரமாவது அனல்இருக்குற அடுப்புலயே மூடிவைக்கனும் காலையில பண்ணத மாலையில சூடுபண்ணி சாப்டோம்னாதான் சுவையாஇருக்கும் இரவில் பண்ணியத காலையில சூடுபண்ணி சாப்டாதான் சுவையாஇருக்கும் .

அப்பவேசாப்டுறது சுவையிருக்காது
சுவையகூட்டலாம்னு அஜினாமோட்டோ சேர்க்கவேண்டாம்..!


இந்த அருமையான,சுவைமிகுந்த, தெளிவான சமையல் குறிப்பினை வழங்கிய "Murugan Theethan"அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment