Wednesday, May 27, 2015

அருமையான எருமை வால் சூப்


எருமை வால் மிகுந்த கொழுப்பு சத்து நிரம்பிய உணவாகும்...அத்தனை எளிதில் கிடைக்காது. சற்று சிரமபட்டு தான் தேடிப்பிடித்தேன்.
வாலில் இறைச்சியும் எலும்புகளும் இருக்கும்...பார்த்தால் வால் மாதிரி தெரியாது. மற்ற பீஸ் மாதிரிதான் இருக்கும்.அது வால்னு நீங்க சொல்லாம யாருக்கும் தெரியாது. அதனால் தைரியமா சாப்பிடலாம் .

வாலை சமைக்கும் முறை
வாலை நன்றாக கழுவி எடுத்து டவலில் துடைக்கவேண்டும்
அதன்பின் வாணலியை உயர்வெப்பத்தில் வைத்து நெய் விட்டு வால் துண்டுகளை கேரமலைஸ் செய்யவேண்டும். கேரமலைஸ் என்பது சற்று பிரவுன் ஆகும் வரை வறுப்பது. கேரமலைஸ் செய்வதால் இறைச்சியில் உள்ள ஜூஸ்கள் எல்லாமே அதனுள்ளேயே தங்கிவிடும். சுவையும் அதிகரிக்கும்
அதன்பின் ஸ்லோகுக்கரில் வால் துண்டுகளை இட்டு அவை மூழ்கும் வரை சிக்கன் ஸ்டாக் ஊற்றவேண்டும் (இல்லையெனில் நீர் சேர்க்கலாம்)
அதன்பின் 2 ஸ்பூன் உப்பு
2
ஸ்பூன் சாம்பார் பவுடர்
1
ஸ்பூன் கரம் மசாலா
1
ஸ்பூன் மல்லிப்பொடி
1
ஸ்பூன் மிளகாய்ப்பொடி
1
ச்பூன் ஆப்பிள் சைடர் வினிகர்
2
செலரி துண்டுகள்
1
காரட்
இதை குக்கரில் இட்டு மூடி ஸ்லோ செட்டிங்கில் வைத்து 8 மணிநேரம் வேக விடவேண்டும்

வெந்தபின் எடுத்து உண்டால் அருமையான சூப் தயார்....இதில் ஜெலடின், கொலாஜன் எல்லாம் இருப்பதால் ஆர்த்ரைட்டிஸ், எலும்பு, ஜாயின்ட்களுக்கு மிக நன்மையளிப்பது

இந்த ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுவை மிகுந்த சமையல் குறிப்பினை வழங்கிய "Neander Selvan" அவர்களுக்கு நன்றி :) 

No comments:

Post a Comment