Tuesday, May 5, 2015

சிக்கன் பிரியாணி


For Marination: 
-ஒரு பாத்திரத்தில் கரம் மசாலா, மல்லி பொடி , மிளகாய் பொடி சீரகப் பொடி (அல்லது பிரியாணி பொடி இருந்தால் அது மட்டும் போதும்), உப்பு,இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு ஒரு கப் தயிர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். இரண்டு ஸ்பூன் எண்ணெயும் சேர்த்து மசாலா பேஸ்ட் போல பண்ணவும்.பின் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிசையவும். இதனுடன் நறுக்கிய புதினா , கொத்தமல்லி இலைகளையும் சேர்த்து பிசைந்து பின் 6 மணி நேரம் ஊற வைக்கவும். (அல்லது நைட் முழுவதும் ப்ரிட்ஜில் வைத்து விடவும் ) (Minimum marination 6 hours).


Preparation: 
ஒரு அடி கனமான பாத்திரத்தில் ஊற வைத்த சிக்கனை பரப்பி வைக்கவும்.chicken must be in contact with bottom and sides of the vessel. பின் சிறிது புதினா இலையை அதன் மேல் பரப்பி நறுக்கி வைத்துள்ள முட்டைக்கோஸை (முட்டைக்கோஸ உப்பு சுடுநீரில்10 நிமிடம் ஊற வைத்து நீரை வடிகட்டிய பின்-பிரியானிக்கு நீர் ஒரு சொட்டு கூட இருக்ககூடாது ) பரப்பி வைக்கவும். உடனே பாத்திரத்தை இறுக மூடி அதன் மேல் ஒரு வெயிட் வைக்கவும் (வெயிட் வைப்பது தம் effective ஆக இருப்பதிற்கு மட்டுமே. பாத்திரத்தின் மூடி தம் போடும் அளவிற்கு டைட்டாக இருந்தால் வெயிட் தேவையில்லை) பின் பாத்திரத்தை அடுப்பில் ஏற்றி முதல் 5 - 8 நிமிடம் high flame பின் medium/low flame 20 நிமிடங்கள் வைத்து பின் அடுப்பை அணைக்கவும். பிரியாணி ரெடி. .10 நிமிடம் கழித்து மூடியை திறந்து பரிமாறவும்.


இந்த சுவையான,புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Thirumalai"அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment