Monday, September 7, 2015

பன்னீர் ஆம்லெட்


தேவையான பொருட்கள்: 
தேங்காய் எண்ணெய் - 1 tbsp 
நறுக்கிய சிகப்பு குடை மிளகாய் - பாதி 
நறுக்கிய பிராக்களி(Broccoli) - 3/4 கப் 
நறுக்கிய காளான் - 3/4 கப் ஸ்பினாச் - 1 கப் 
பன்னீர் - 350 gms பால் - 1/4 கப் 
நறுக்கிய பூண்டு - 1 
உப்பு - 1/2 tsp 
மஞ்சள் பொடி - 1/4 tsp 
மிளகு பொடி - 1/8 tsp
 துறுவிய சீஸ் - 1/2 கப்
செய்முறை: 
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாகவும் மிதமான தீயில் குடை மிளகாய் மற்றும் பிராக்களியை 3 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் காளான் சேர்க்கவும்.
* காய்கள் வெந்த பிறகு ஸ்பினாச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அடுப்பை அனைத்து ஆற விடவும். மிக்சியில் பன்னீர், பால், பூண்டு, உப்பு, மஞ்சள் பொடி மற்றும் மிளகு பொடி போட்டு நன்கு கலந்து கொள்ளவும். 
* ஒரு தவாவில் எண்ணை விட்டு காய்ந்தவுடன் சிறிதளவு மாவை ஊற்றி சிறு தீயில் வேக விடவும். ஒரு பாதியில் மட்டும் 2 tbsp அளவு சீஸ் மற்றும் சிறிது காய்கறி கலவையை போட்டு மீதி பாதி பகுதியை மடித்து சீஸ் உருகும் வரை வேக விடவும். 
* இதே போல் மீதமுள்ள மாவை, காய்கறி மற்றும் சீஸ் வைத்து ஆம்லெட் ஆக செய்யவும்.

இந்த சுவையான, புதுமையான சமையல் குறிப்பினை வழங்கிய "Subash V Momaya" அவர்களுக்கு நன்றி.

இந்த பதிவினை தமிழாக்கம் செய்து வழங்கிய "Shan Mani" அவர்களுக்கும் நன்றி. 

2 comments: