Thursday, January 29, 2015

குடல் ஃப்ரை

குடல் ஃப்ரை:
(ட்ரை ஃபிரையும் இல்லாமல் குழம்பாகவும் இல்லாமல் சத சத பக்குவத்துடன் செய்வது. இட்லி தோசைக்கு மட்டும் சூப்பர். சாதத்துக்கு ஓகே. பேலியோவுக்கு இதை மட்டும் தனியாக, காரம் குறைவாக, இன்னும் ட்ரையாக வைக்கலாம்)
தேவையான பொருட்கள்.:
ஒரு ஆட்டுக் குடல் - ஆட்டுக் குடல் சுத்தம் செய்தது (சிறிய துண்டுகளாக (1 இஞ்ச்) நறுக்கி, மூங்கில் அல்லது பிளாஸ்டிக் தட்டுக் கூடையில் தேய்த்துத் தேய்த்து வெந்நீரை ஊற்றி பலமுறை கழுவ வேண்டும்)
தேவையான பொருட்கள்:
சுத்துக் கொழுப்பு - சிறிதளவு தேவையைப் பொறுத்து
இஞ்சி - 25 கிராம்
பூண்டு - ஆறு பல்
வர மிளகாய் - 10
சோம்பு - 1/4 டீஸ்பூன்
தனியா - 1/4 டீஸ்பூன்
வெங்காயம் - 1/2 கிலோ சின்ன / பெரிய வெங்காயம், சிறியதாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 10
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் துறுவல் - தூவுவதற்கு சிறிதளவு மட்டும்
கொத்து மல்லி தழை - தேவைக்கு
செய்முறை:
இஞ்சி, பூண்டு, வர மிளகாய், சோம்பு, தனியா அனைத்தையும் சிறிதளவு நீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.
அதை குக்கரில் சுத்தம் செய்த குடலுடன் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு போட்டு அது முழுகும் வரை தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும். (சுமார் 4 அல்லது 5 விசில் மீடியம் ஃப்ளேமில்)
வெந்தவுடன் குடலை மட்டும் வடி கட்டி எடுத்து வைக்கவும். (இந்த தண்ணீரை சூப் போலவும் குடிக்கலாம்)
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு வணக்கி, குடலையும் சுத்துக் கொழுப்பையும் போட்டு நன்றாக தண்ணீர் ஓரளவு ட்ரை ஆகும் வரை வணக்கவும். உப்பு சரிபார்த்து, நறுக்கிய கொத்து மல்லி தேங்காய் துறுவல் இரண்டையும் போட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
இதில் தேங்காய் கொத்துமல்லி தழை போடும் முன் ரத்தம் சேர்த்து ஃபிரை செய்தும் சமைக்கலாம். இதில் ரத்தம் ஃபிரை ஆனவுடன் தேங், கொ.மல்லி சேர்க்கவும். ரத்தம் சேர்ப்பதாக இருந்தால் ப.மிளகாயையும் வெங்காயத்தையும் 1/4 மடங்கு அதிகப் படுத்தவும்.
குடல் ஃபிரை ரெடி. இதனுடன் இட்லி 15 அல்லது கல் தோசை 20 சாப்பிடவும். பேலியோவுக்கு இட்லி தோசை தவிர்த்து குடலை மட்டும் சாப்பிடவும்.

இந்த ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Sivaram Jagadeesan"அவர்களுக்கு நன்றி :)

No comments:

Post a Comment