Sunday, February 1, 2015

நெல்லிக்காய் சாதம்



தேவையான பொருட்கள்:

காலிபிளவர் துருவல் - 1 கப்
நெல்லிக்காய் - 2
மிளகாய் - 2
தேங்காய் துருவல் - 3 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள்
காயத் தூள்
வெந்தயத் தூள்
நல்லெண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு,கறிவேப்பிலை
உப்பு

செய்முறை:
* உப்பு போட்ட சுடுநீரில் நன்கு கழுவி சுத்தம் செய்த காலிபிளவரை துருவி வைத்துக் கொள்ளவும்.
* ஒரு நெல்லிக்காயை இலேசான துண்டுகளாக நறுக்கி வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி கொள்ளவும்
* மற்றொரு நெல்லிக்காயைத் துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு அதனோடு தேங்காய், வதக்கிய மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து 
கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்
* வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு, கறிவேப்பிலைகாயத்தூள், வெந்தயத் தூள் சேர்த்து தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும்.
சிறிது உப்பு சேர்த்து அதனுடன் வதக்கிய நெல்லிக்காய் ,காலிபிளவர் துருவல் சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும். சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.


இந்த சுவையான, ஆரோக்கியமான சமையல் குறிப்பினை வழங்கிய "Shanthi Pettai" அவர்களுக்கு நன்றி :)



No comments:

Post a Comment